×

சிவபுரம் ஊராட்சி பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

கும்பகோணம், பிப்.12: கும்பகோணத்தை அடுத்த சிவபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஜேஆர்சி சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
தலைமையாசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த பாபு, சேகர் முன்னிலை வகித்தனர். ஜேஆர்சி கவுன்சிலர் அந்தோணிராஜ் வரவேற்றார். குடந்தை கல்வி மாவட்ட ஜேஆர்சி அமைப்பாளர் ஜான்ஸ்டீபன், சாலை போக்குவரத்து விதிமுறைகள் நமது பாதுகாப்பிற்கே என்ற தலைப்பில் பேசுகையில், சாலையில் எப்போதும் இடது ஓரமாகவே பயணிக்க வேண்டும். சாலையை கடக்கும்போது சிக்னல்களை பார்த்தும், எந்த வாகனமும் வரவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகே கடந்து செல்ல வேண்டும் என்றார். மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஆசிரியைகள் வளர்மதி, சித்ரா வாழ்த்தி பேசினர். அனைத்து மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர் ராஜகுமார் நன்றி கூறினார்.

Tags : Sivapuram Panchayat School ,
× RELATED பாபநாசம் அருகே பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது